தூத்துக்குடி சிறுமி உலக சாதனை! குவியும் பாராட்டுக்கள்!
Jul 21, 2021, 10:22 IST
தூத்துக்குடியில் வசித்து வருபவர் தேவசகாயம்.இவரது 4 வயது மகள் லின்சியா ஆராதனா. இவர் கோரம்பள்ளம் பகுதியில் உள்ள செர்வைட் என்ற தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார்.
இந்த சின்னஞ்சிறு சிறுமிக்கு நடைப்பயிற்சியும், ஓட்ட பயிற்சியும் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நீண்ட தூர ஓட்டத்துக்கு தயாரானார் சிறுமி லின்சியா ஆராதனா.நோபல் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பெறுவதற்காக 6 கிலோமீட்டர் 100 மீட்டர் தூரத்தை ஒரு மணி நேரம் 4 நிமிடங்களில் கடந்து சாதனை படைத்துள்ளார் இந்த சிறுமி.
சிறுமி லின்சியா ஆராதனாவுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பாராட்டு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்துகொண்டு சிறுமிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.
From around the
web