சென்னையில் வெளுத்து வாங்கும் மழை.. 3 விமானங்கள் அதிரடியாக ரத்து..!!
புயல் மற்றும் கனமழை காரணமாக மூன்று விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளது. தற்போது 5 கி.மீ வேகத்தில் வடமேற்கு திசையில் 'மிக்ஜம்' புயல் நகர்ந்து வருகிறது. சென்னையில் இருந்து 310 கி.மீ தொலைவில் தென் கிழக்கு திசையில் புயல் நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சென்னையில் அதிகாலை முதலே பரவலாக மழை பெய்து வருகிறது.
கனமழையால் மும்மை, ஹைதராபாத் செல்ல இருந்த 2 விமானங்களும், மும்பையில் இருந்து சென்னை வரவிருந்த ஒரு விமானமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் இருந்த புறப்படவிருந்த 9 விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.
இந்த வகையில் புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து ஆந்திரம், ஒடிஸா வழியாகச் செல்லும் 118 விரைவு ரயில்கள் டிச.3 முதல் டிச.7-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய தெற்கு ரயில்வே தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.