காற்றழுத்தத் தாழ்வுப் பாதையால் மாற்றம் - தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு!

 
மழை மழை

தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், தற்போது நிலவி வரும் வளிமண்டல மாற்றங்களால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவின் மரத்வாடா முதல் தென்தமிழகம் வரை, உள் கர்நாடகா வழியாக ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன் காரணமாகச் சென்னை உட்படத் தமிழகத்தின் பல மாவட்டங்களில் ஏப்ரல் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன மழை

குறிப்பாகப் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக மாவட்டங்களில் மழையின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். சில இடங்களில் 30-40 கி.மீ வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும். சில குறிப்பிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்ய வாய்ப்புள்ள போதிலும், ஒரு சில மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

மழை

கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் அதிகமாக இருக்கக்கூடும் என்பதால், கடலுக்குச் செல்லும் மீனவர்கள் வானிலை மையத்தின் அறிவிப்புகளைக் கவனித்துச் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.