இன்று சபரிமலை நடை திறப்பு!!
ஒவ்வொரு தமிழ்மாதப் பிறப்பு மற்றும் சிறப்பு திருவிழாக்கள், பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. கேரளாவில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் பூத்தறி பூஜைக்காக ஆகஸ்ட் 10ம் தேதி நடை திறக்கப்பட்டு சாத்தப்பட்டது.
தற்போது ஆவணி மாத பூஜைக்காக ஆகஸ்ட் 17ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆவணி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலில், இன்று மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது மாதாந்திர பூஜைகள், வழிபாடுகள் முடிவடைந்து ஆகஸ்ட்21ம் தேதி இரவு நடை சாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று சபரிமலை ஐயப்பனுக்கு இலட்சார்ச்சனை நடைபெற உள்ளது. கேரளாவில் ஓணம் பண்டிகை வருவதையொட்டி ஆகஸ்ட் 28ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?