தங்கம் அதிரடி உயர்வு!! இல்லத்தரசிகள் அதிர்ச்சி!!
ஜூலை மாத தொடக்கம் முதலே தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகிறது. அதிலும் கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருவது முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில் நேற்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்துள்ள நிலையில் இன்றும் தங்கத்தின் விலை ரூ160 உயர்ந்துள்ளது.
இன்றைய விலை நிலவரப்படி கிராமுக்கு ரூ20 அதிகரித்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.5,610க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.44,880க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 3 நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை உயர்வுடன் இருப்பதால், இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தங்கத்தின் விலை உயர்ந்த அதே நேரத்தில் கிராமுக்கு 40 காசுகள் அதிகரித்துள்ளது. இன்றைய விலை நிலவரப்படி ஒருகிராம் வெள்ளியின் விலை ரூ.82.40க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.82,400 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்படுகிறது. அவை நாணய ஏற்ற இறக்கங்கள் மற்றும் வட்டி விகிதங்கள் மற்றும் பணவீக்கம் போன்ற பிற காரணிகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகின்றன கொரோனா ஊரடங்கிற்கு பிறகு தங்கத்தின் மீதான சேமிப்பு இல்லத்தரசிகள், முதலீட்டாளர்களிடையே அதிகரிக்க தொடங்கியுள்ளது அவசர, அவசிய கால கட்டத்தில் தங்க நகைகள் தான் உடனடி பணமாக்க முடியும் என்பதே இதற்கு காரணம்.
தங்க நகைகளில் முதலீடு செய்வது பிற்கால வாழ்க்கைக்கு பெரிய அளவில் உதவும், பெண் பிள்ளைகளுக்கு பிற்காலத்தில் பலனாக இருக்கும் என்பதால் மக்கள் தங்கத்தை வாங்கி குவிக்கிறார்கள். தங்கம் குறைந்தால் மகிழ்வதும், அதிகரித்தால் கவலைப்படுவதும் நம்மவர்களின் இயல்பு. அமெரிக்க பங்குச்சந்தையும் கடும் வீழ்ச்சியடைந்த நிலையில், இந்திய பங்கு சந்தைகளிலும் அதன் எதிரொலியாய் தள்ளாடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், பலரும் பாதுகாப்பு கருதி தங்களது முதலீட்டை தங்கத்தின் பக்கம் திருப்பியிருப்பதால், இப்போதைக்கு தங்கத்தின் விலையில் பெரிய மாற்றங்கள் நிகழாது எனவும், தங்கத்தின் விலை பெரிய அளவில் குறைவதற்கு வாய்ப்பில்லை என்றும் பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை பல்வேறு மாற்றங்களை சந்தித்து வருகிறது. இந்த விலைகளை பார்க்கும் போது மக்களுக்கு தங்கத்தின் மீது ஒரு பயம் வருகிறது. அதனால், மக்கள் தங்கம் வாங்குவதற்கு யோசனை செய்து வருகின்றனர்.ஆனால் முதலீட்டாளர்களை பொறுத்தவரை இது ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. அதே நேரத்தில் நடுத்தர மற்றும் ஏழை வர்க்கத்தினருக்கு பெரும் அதிர்ச்சியாகவே உள்ளது. ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை குறையுமா என எதிர்பார்க்க தொடங்கியுள்ளனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?