மீண்டும் உச்சம் தொட்ட தங்கம்... நகைப்பிரியர்கள் அதிர்ச்சி!

 
தங்கம்

 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரப்படி நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஆகஸ்ட் 9ம் தேதி ஆடிவெள்ளிக்கிழமையான இன்று தங்கத்தின்விலை கிராமுக்கு ரூ75 உயர்ந்துள்ளது. இதனால் இல்லத்தரசிகள், நகைப்பிரியர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இன்றைய விலை நிலவரப்படி ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ 6645க்கும் சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.51,400க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  அதே நேரத்தில் வெள்ளி விலை  கிராமுக்கு 1.50 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.88க்கும், ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.1,500 உயர்ந்து  ரூ.88,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கம்

தற்போது ஆடி மாதம் என்பதால், அடுத்த மாதமான ஆவணியில் சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும். இதனையடுத்து  பொதுமக்கள் தங்கம் அதிக அளவில் வாங்கத் தொடங்குவர். தங்கத்தின் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  பட்ஜெட்டில் தங்கத்தின் மீதான இறக்குமதி வரி 6 சதவீதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டது.     இந்தியாவை பொறுத்தவரை   ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு தங்கம் நகையாக மட்டுமின்றி பெரும் சேமிப்பாகவும் அமைந்துள்ளது.  இந்த நிலையில், சமீபகாலமாக தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே சென்றது.  இதனால் நடுத்தர வர்க்கத்தினர் தங்கம் இனி வாங்கவே முடியாதோ என்ற நிலை உருவானது.
தங்கம்

இதனால், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தங்கம் விலையை குறைக்க ஏதேனும் அறிவிப்பு வருமா? என மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதையடுத்து, தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை 6 சதவீதம் மத்திய அரசு குறைப்பதாக அறிவித்ததும் நகைப்பிரியர்கள், தங்கத்தின் மீதான முதலீட்டாளர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.  தங்கத்தின் மீதான இறக்குமதி வரியுடன் வெள்ளி, பிளாட்டினம் மீதான இறக்குமதி வரியும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆபரணங்கள் விலை கணிசமாக குறையலாம் என்கின்றனர் பொருளாதார வல்லுனர்கள்

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா