இன்று சனி பிரதோஷம்... இந்த மந்திரத்தை உச்சரிக்க மறக்காதீங்க... செல்வம் குவியும்!

 
வில்வம் சிவன் சிவபெருமான் பிரதோஷம்

இன்று மாலை சனிக்கிழமை பிரதோஷ தினம். பிரதோஷ வேளையில் இந்த மந்திரத்தை உச்சரிக்க மறக்காதீங்க. வாழ்வில் எண்ணற்ற பலன்கள் கைகூடும். பொதுவாகவே பிரதோஷ காலங்கள் என்பது நமது வேண்டுதல்கள் நிறைவேற்றிக் கொள்வதற்கான காலங்கள். அதிலும் சனிக்கிழமைகளில் வருகின்ற பிரதோஷம் கூடுதல் விசேஷம். சிவபெருமானுக்குரிய பிரதோஷ தினம்.

கடவுளை வழிபட எல்லா நாட்களுமே உகந்த நாட்கள் என்றாலும் நம் பாவ வினைகளில் இருந்து விடுபட கால நேரம் பார்த்து வழிபாடுகள் செய்ய வேண்டியது அவசியம். பொதுவாக மாலை நேரத்தில் பிரதோஷ வழிபாடு செய்யும் போது இதைச் சொல்ல மறக்காதீங்க.

பிரதோஷம் சிவன் நந்தி

மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை பிரதோஷ காலம் எனப்படுகிறது. அந்த நேரத்தில் சிவ ஆலயங்களில் யாருடனும் பேசாமல் அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து பின்வரும் ஸ்லோகத்தை 108 முறை சொல்ல வேண்டும். இந்த ஸ்லோகத்தை தொடர்ந்து சொல்லி வந்தால் இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி என்பது ஐதிகம்.

பிரதோஷம்

ஸித்தயோகீ மஹர்ஷிச்ச
ஸித்தார்த்தஹ் ஸித்த ஸாதக|
பிக்ஷூச்ச பிக்ஷூரூபச்ச விபனோம்ருது ரவ்யய:
இன்மையிலும் நன்மை தருவார் பிரதோஷ மூர்த்தி !
ஓம் நம சிவாய
அவன் தாள் பணிவோம். சிவாய நம சொல்லுவோம்.