இன்று 2024-25 கல்வியாண்டு துவக்கம்... நாடு முழுவதும் சிபிஎஸ்இ புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வந்தது!

 
மாணவர்களிடம் குஜராத் கலவரம் பற்றி கேள்வி கேட்ட சி.பி.எஸ்.இ..!!
நாடு முழுவதும் 2024-25-ம் கல்வியாண்டுக்கான புதிய  பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள நிலையில், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ), புதிய கல்வியாண்டு இன்று ஏப்ரல்2ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான புதிய  பாடத்திட்டத்தை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.

சிபிஎஸ்இ

புதிய கல்விக்கொள்கை அடிப்படையிலான புதிய பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தி வருகிறது. அதன்படி தற்போது 9 மற்றும் 10ம் வகுப்பு வரையிலான புதிய பாடத்திட்டங்களை வெளியிட்டுள்ளது.

இந்த பாடத்திட்டத்தில், 2 மொழிப்பாடம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகியவை கட்டாய பாடங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. 3வது மொழி (தமிழ் உள்பட உள்ளூர் மொழிகள்) மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடம், திறன் மேம்பாட்டு பயிற்சி ஆகியவை விருப்பப்பாடமாக சேர்க்கப்பட்டுள்ளன.

சிபிஎஸ்இ

கலை படிப்பு, உடற்கல்வி, உடல் நலம், தொழிற்பயிற்சிகள் ஆகியவற்றை உள்மதிப்பீட்டுக்காக பள்ளிகளே தேர்வு செய்து கொள்ளலாம் என்று புதிய பாடத்திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 11 மற்றும் 12-ம் வகுப்பு பாடத்திட்டத்தில், 9 பாடங்கள் இடம் பெற்றுள்ளன. இதில், 5 கட்டாயப் பாடங்களும், 4 விருப்பப் பாடங்களும் இடம் பெற்றுள்ளன.  3- வது மொழியாக தமிழ் உள்பட 34 மொழிகளை தேர்வு செய்யலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web