இன்றே கடைசி.. சித்தா, ஆயுர்வேதம், ஹோமியோபதி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!

 
மூலிகை

இந்தியா முழுவதும் மருத்துவ படிப்புக்களுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில்  சித்தா,  ஆயுர்வேதம், ஹோமியோபதி    படிப்புகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் கீழ் தமிழகம் முழுவதும் 5 அரசு கல்லூரிகளில் உள்ள 330 இளநிலை மருத்துவ இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 50% இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் மாநில அரசு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.  

மூலிகை

அரசு ,  நிர்வாக ஒதுக்கீடு இடங்கள் மற்றும் தனியார் கல்லூரிகளின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு மாநில அரசு கலந்தாய்வு நடத்தி  வருகிறது. இதன் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று  வருகிறது.இந்நிலையில் சித்தா, ஆயுர்வேதா மற்றும் ஹோமியோபதி  படிப்புகளுக்கான நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.  நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விண்ணப்பங்கள் மற்றும் தகவல் தொகுப்பை  இன்று  முதல் ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தகுந்த   தகுந்த ஆவணங்களுடன்  இன்று மாலை 5.30 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

கவுன்சிலிங்


சமர்ப்பிக்க வேண்டிய முகவரி :
செயலாளர் தேர்வு குழு இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை இயக்ககம் 
அறிஞர் அண்ணா அரசினர் இந்திய மருத்துவமனை வளாகம் 
அரும்பாக்கம் 
சென்னை 600 106 என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

From around the web