இன்று ஜி20 மாநாடு... சென்னையில் பலத்த பாதுகாப்பு... ட்ரோன்கள் பறக்க தடை!

 
ஜி20

காஞ்சிபுரம் மாவட்டத்திலும், மாமல்லபுரம் பகுதிகளிலும் இன்று முதல் அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு ட்ரோன்களைப் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று ஜூலை 24ம் தேதி திங்கட்கிழமை மாமல்லபுரத்தில் ஜி20 மாநாடு நடைபெற உள்ள நிலையில், சென்னையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜூலை26ம் தேதி வரை  ட்ரோன்களைப் பறக்க விட தடை விதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் இருந்து ஜி20 மாநாட்டில் கலந்து கொள்ள பிரதிநிதிகள் சென்னையில் குவிந்துள்ளனர். இந்தியா, அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா  நாடுகள் ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் தலைவராக இந்தியா உள்ளது.

ட்ரோன்
இந்த கூட்டமைப்பில்  உறுப்பு நாடுகளுக்கு இடையேயான பரஸ்பர வளர்ச்சி, ஒப்பந்தங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். இதற்கான ஜி20 உச்சி மாநாடு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ஜி20 மாநாடு நிகழ்வுகள் மாமல்லபுரத்தில் நாளை ஜூலை 24ம் தேதி முதல் 26ம் தேதி வரை நடைபெற உள்ளன. 

ஜி20

ஜி20 மாநாட்டில் வெளிநாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருப்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  இந்நிலையில், சென்னையில் ஜி-20 கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகள் நடைபெறும் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web