தக்காளி அதிரடி விலை குறைப்பு!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!

 
தக்காளி விலை உயர்வு

ஜூலை மாதத் தொடக்கம் முதலே தக்காளி விலை உச்சத்தில் இருந்து   வந்தது. தங்கம் விலை போல தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் நடுத்தர வர்க்கத்தினர் , இல்லத்தரசிகள் பெரிதும் அதிர்ச்சி அடைந்தனர்.  கடந்த சில நாட்களாக ஒரு கிலோ  தக்காளி விலை ரூ.200க்கும் மேல் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  
 தக்காளி விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. ரேஷன் கடைகள் மற்றும் பசுமை பண்ணை கடைகள் மூலம் கொள்முதல் விலைக்கே விற்பனை செய்தது.

தக்காளி

இதனால் தக்காளி விலை குறையத் தொடங்கியது. அந்த வகையில், 500 ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்பட்டது.  தற்போது தக்காளி வரத்து அதிரித்துள்ள நிலையில், தக்காளி விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, கோயம்பேடு சந்தையில் நீண்ட நாட்களுக்கு பிறகு தக்காளி விலை ரூ.100க்கு கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தக்காளி

அந்த வகையில் இன்றைய விலை நிலவரப்படி முதல் ரக தக்காளி விலை  ரூ.10 குறைந்து, ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.120க்கும்,  2ம் ரக தக்காளியின் விலை ரூ20 குறைந்து ஒரு  கிலோ தக்காளியின் விலை ரூ.80க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது தக்காளி வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளதால்  இனிவரும் நாட்களில் மேலும் விலை குறைய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web