தக்காளி அதிரடி விலைக்குறைப்பு!! இல்லத்தரசிகள் மகிழ்ச்சி!!
இந்தியா முழுவதும் விளைச்சல் மற்றும் வரத்து குறைவு காரணமாக ஜூலை மாத தொடக்கம் முதலே தக்காளியின் விலை உச்சத்தில் இருந்தது. இந்த விலையேற்றத்தால் நடுத்தர மக்கள் கடும் அவதிப்பட்டனர். சில்லறை விற்பனைக் கடைகளில் ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ 200 வரை விற்பனை செய்யப்பட்டது. மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் தக்காளியின் விளைச்சல் பாதிக்கப்பட்டது.
இதனால் வரத்தும் குறைந்து விட்டது. தக்காளியை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய போலீள் தக்காளியால் கோடீஸ்வரர் , சிவப்பு தங்கம் என பலப்பல கதைகள் . தற்போது தக்காளி விலை கிலோ வெறும் ரூ 20, 30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தக்காளியை வைத்து மீம்ஸ்கள் களைகட்டின. தக்காளி தோட்டத்திற்கு சிசிடிவி கேமரா, தக்காளி கடைகளில் கேமிராக்கள் ஹோட்டலில் கணவர் சமையலுக்கு கூடுதலாக தக்காளி பயன்படுத்தியதால் மனைவி கோபித்து வெளியேறிய கதைகளும் உண்டு.
நேற்றைய தினம் கிலோ தக்காளி ரூ 90 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தக்காளியின் விலை கிலோ ரூ 40க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அது போல் பொடி தக்காளி, அதாவது பார்ப்பதற்கு இலந்தை பழம் சைஸில் உள்ள தக்காளி கிலோ ரூ 20 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளியின் விலை சற்று குறைந்ததால் இல்லத்தரசிகள் சற்றே ஆசுவாசப்பட்டுள்ளனர். இதனால் காய்கறி மார்க்கெட்டுகளில் கூட்டம் அலை மோதுகிறது. இன்று விட்டால் தக்காளி விலை மேலும் கூடிவிடுமோ என்ற அச்சத்தில் மக்கள் கடைகளில் தக்காளியை வாங்கி குவித்து வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?