நாளை திரௌபதி முர்மு தமிழகம் வருகை!! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!
நாளை ஆகஸ்ட் 5ம் தேதி சனிக்கிழமை குடியரசு தலைவர் தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, நீலகிரி மாவட்டத்திற்கு வருகை புரியும் நிலையில் அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அவர் அங்கு தெப்பக்காடு முகாமை பார்வையிட்டு அங்கு வசிக்கும் பழங்குடியின மக்களை சந்தித்து பேசுகிறார். அத்துடன் ஆஸ்கர் விருது பெற்ற பொம்மன் -பெள்ளி தம்பதியினரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார்.
நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு பகுதி காவல்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. கடும் சோதனைக்கு பிறகே தெப்பக்காடு வரும் அனைவருக்கும் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவர் ஹெலிகாப்டர் மூலம் வருகைபுரிய இருப்பதால் மசினகுடியில் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன. மோப்ப நாய்கள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அந்தந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். முதுமலை புலிகள் காப்பகம் ஐந்து அடுக்கு உயர் பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் காரணமாக ட்ரோன்கள் பறக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்திற்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாளை ஆகஸ்ட் 5ம் தேதி சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு வருகை தர இருக்கிறார். குடியரசுத் தலைவர் வருகையையொட்டி மசினகுடி ஹெலிபேடு, தெப்பக்காடு யானைகள் முகாம்களில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது; பாதுகாப்பு நடவடிக்கையாக நாளை வரை அனைத்து விடுதிகளிலும் சுற்றுலா பயணிகளை தங்க அனுமதி இல்லை என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?