நாளை சூரிய கிரகணம்... அமெரிக்க பள்ளிகளுக்கு விடுமுறை.. வெறும் கண்ணால் பார்க்காதீங்க!
வட அமெரிக்காவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் நயாகராவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. 1979-க்கு பிறகு நயாகராவில் சூரிய கிரகணம் தென்பட உள்ளது. இதனால் லட்சக்கணக்காக மக்கள் அங்கு குவியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

நயாகரா, கனடாவில் நாளை ஏப்ரல் 8 ம் தேதி சூரிய கிரகணம் நிகழ உள்ள நிலையில், நயாகரா நீர்வீழ்ச்சியில் சூரிய கிரகணம் பிரதிபளிக்கும். இந்த நிகழ்வை காண ஏராளமான பொதுமக்கள் நயாகரா நீர்வீழ்ச்சி அருகில் கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக அந்த பகுதிகளில் அவசர நிலை அறிவித்துள்ளதாக நயாகரா பிராந்தியத் தலைவர் ஜிம் பிராட்லி தெரிவித்துள்ளார்.
நாளை மில்லியன் கணக்கான மக்கள் நயாகரா நீர்வீழ்ச்சியில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவசரகால தேவைகளுக்காக செல்போன், நெட்வொர்க், போக்குவரத்து நெரிசல் பிரச்னைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் மாற்று ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.

சூரிய கிரகணத்திற்கு முன் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை இருப்பு வைத்துக் கொள்ளுமாரும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சாலை விதிகளை பின்பற்றவும், சூரிய கிரணத்தை சாலையில் நின்று புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சூரிய கிரகணத்தை முன்னிட்டு நயாகராவில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சூரிய கிரகணத்தை நேரடியாக பார்ப்பதை தவிர்த்து ISO 12312-2 சான்றளிக்கப்பட்ட கண்ணாடிகளைப் பயன்படுத்தி அதனை பார்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!
