வாகன ஓட்டிகளே உஷார்... மோடி வாகனப் பேரணி... ரோடு ஷோ... 3 மணி முதல் இந்தப்பக்கம் போகாதீங்க!
மக்களவை தேர்தல் பிரச்சாரத்துக்காக இன்று மாலை பிரதமர் மோடி சென்னை வருகிறார். இவரது வருகையை ஒட்டி சென்னையில் உச்சகட்ட பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை முழுக்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து சென்னை போக்குவரத்து காவல் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் “பிரதமர் மோடி இன்று மாலை 6 மணிக்கு தி.நகர், தியாகராய சாலையில் நடைபெறும் சாலை அணிவகுப்பு கண்காட்சியில் கலந்து கொள்கிறார். இந்த சாலை அணிவகுப்பு கண்காட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள், கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர்.
இதனையடுத்து ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, 100 அடி சாலை, அண்ணாசாலை, எஸ்.வி. படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தி.நகர் பகுதிகளில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிட்டு கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது. பிற்பகல் 3 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை, வெங்கட நாராயண சாலை, ஜி.என்.செட்டி சாலை அணிவகுப்பு முடியும் வரை வாகன நிறுத்த தடை
வணிக வாகனங்கள் பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இடையிடையே தடை
பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து கத்திப்பாரா நோக்கி செல்லும் வாகனங்கள்.
மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள்.
CIPET யில் இருந்து அண்ணாசாலை நோக்கி செல்லும் வாகனங்கள்.
வடபழனியில் இருந்து தி.நகர் வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
கத்திப்பாராவில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள்.
CPT -யில் இருந்து விமான நிலையம் மற்றும் காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள்.
அண்ணா சிலையில் இருந்து மவுண்ட் ரோடு நோக்கி செல்லும் வாகனங்கள்.
வாகன ஓட்டிகள் தங்கள் இலக்கை அடைய அதற்கேற்ப பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!