அடுத்தடுத்து சோகம்... பட்டாசு ஆலை வெடி விபத்தில் தரைமட்டமான கட்டிடங்கள்... 3 பேர் பலி!

 
பட்டாசு ஆலை வெடி

விருதுநகர் மாவட்டத்தில்  பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே உள்ள தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.  
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே எம்.புதுப்பட்டியில் ராஜரத்தினம் என்பவரது பெயரில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பட்டாசு வெடி விபத்தில் கட்டங்கள் தரைமட்டமாகி உள்ளன  இதில் 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் மேலும் பலர் பாதிக்கப்பட்டு இருக்கலாம் எனக்  கூறப்படுகிறது. சம்பவம் அறிந்து உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் அங்கு படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web