அரியலூரில் சோகம்... குளவிகள் கொட்டியதில் தம்பதி பலி!

 
குளவி

அரியலூர் மாவட்டத்தில் குளவிகள் கூட்டமாக தாக்கியதில் தம்பதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.வீட்டில் இருந்தபோது எதிர்பாராதவிதமாக குளவிகள் கூட்டமாக அவர்களைத் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் குளவிக்கடி காரணமாக இருவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனை ஆம்புலன்ஸ் போலீஸ் கொலை கத்திக்குத்து

சம்பவம் குறித்து தகவலறிந்த உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர்.குளவிகள் கூட்டமாக தாக்கியதில் தம்பதி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.