கோவையில் சோகம்... விபத்தில் உயிரிழந்த காதலன்... சோகம் தாங்காமல் தூக்கிட்டு காதலி தற்கொலை!

 
தர்ஷினி

சாலை விபத்தில் தனது காதலன் இறந்த செய்தி கேள்வியுற்று, சோகத்தில் இருந்து வந்த காதலி, காதலனின் பிரிவைத் தாங்க முடியாது, தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம்  பூங்கா நகரில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவருடைய மகள் தர்ஷினி. 21 வயதாகும் தர்ஷினி, நரசிம்ம நாயக்கன்பாளையம் அருகே  உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் சோமனூர் பகுதியைச் சேர்ந்த திவாகர் என்பவரும் பணிபுரிந்து வந்தார். திவாகருக்கு வயது 24.  இருவருக்கும் இடையே பணி நிமித்தமாக ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 

விபத்து

இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியும், நிறுவனத்திலும், தனிமையில் சந்தித்தும் தங்களது காதலை வளர்த்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் பிற ஊழியர்களுக்கும் தெரிந்திருந்து, அவர்களும் இவர்களது காதலுக்கு ஆதரவு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், திவாகர், நிறுவனத்தில் பணியை முடித்து விட்டு சிங்காநல்லூர் பைபாஸ் ரோட்டில் தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது திடீரென  எதிரே வந்த வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயமடைந்த திவாகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் திவாகர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஆம்புலன்ஸ்

இதை அறிந்த அவரது காதலி தர்ஷினி கதறி அழுதுகொண்டே மருத்துவமனைக்கு சென்று திவாகர் உடலை பார்த்தார். அவருடைய உறவினர்கள் எத்தனையோ ஆறுதல் கூறியும் தர்ஷினி கதறியதை நிறுத்தவே இல்லை. அழுது கொண்டே வீட்டிற்கு சென்ற தர்ஷினி தனது அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சாலை விபத்தில் காதலன் உயிரிழந்ததால் காதலி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web