ஈரோட்டில் சோகம்... தீயில் கருகி 2,500 கோழிகள் உயிரிழப்பு!

 
தீ விபத்து கோழி


ஈரோடு மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில், சுமார் 2,500 கோழிகள் தீயில் கருகி உயிரிழந்தது.

ஈரோடு மாவட்டத்தில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணி. இவர் அதே பகுதியில் 2 தகர ஷெட்டுகள் அமைத்து கடந்த 16 வருடமாகக் கோழிப்பண்ணை ஒன்றை நடத்தி வருகிறார். இங்கு கோழிக்குஞ்சுகளை வளர்த்து வருகிறார். கோழிக்குஞ்சுகள் பெரியதானதும் அவற்றை விற்பனை செய்து வருகிறார். 

ஈரோடு

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலசுப்ரமணி 5,000 கோழி குஞ்சுகளை வாங்கி 2 தகர ஷெட்டுகளில் அடைத்து வைத்திருந்தார். ஒரு ஷெட்டில் 2,500 கோழிக்குஞ்சுகள் வீதம் 2 ஷெட்டில் 5000 கோழிக்குஞ்சுகளை அடைத்து வளர்த்து வந்தார்.

இந்நிலையில் நேற்று நள்ளிரவு கோழிப்பண்ணையில் இருந்து புகை வெளியேறிச் சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிய தொடங்கியது. இது குறித்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக பாலசுப்பிரமணிக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்து விட்டு சம்பவ இடத்திற்கு சென்றார். 

தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து, நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 கோழி பண்ணை

எனினும் இந்தத் தீ விபத்தில் ஒரு தகர ஷெட்டில் இருந்த 2,500 கோழிக்குஞ்சுகள் அனைத்தும் தீயில் கருகி உயிரிழந்தன. அந்தத் தகர ஷெட்டு முழுவதும் தீயில் எரிந்து சாம்பலானது. 2500 கோழிக்குஞ்சுகள் ரூ.1.50 லட்சமும், தகர ஷெட்டு ரூ.13 லட்சம் என மொத்தம் ரூ.15 லட்சம் மதிப்பான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. 

தீயணைப்பு வீரர்கள் உரிய நேரத்தில் செயல்பட்டதால் மற்றொரு தகர ஷெட்டில் இருந்த 2,500 கோழி குஞ்சுகள் உயிர் தப்பின. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!