திருப்பூரில் சோகம்... தெருநாய் கடித்து வாலிபர் மரணம்!

கடந்த வாரம் அற்புதராஜ் உடல்நிலை மோசமானது. அவரை, தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்றனர். பரிசோதனையில், நாய் கடிக்கு போதிய சிகிச்சையை அவர் பெறாததால் உடல்நிலை மோசமானது தெரியவந்தது. இதையடுத்து கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அற்புதராஜ் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், “தெருநாய் கடித்து தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. தெரு நாய்களை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தெருநாய் கடித்தால், உடனடியாக மருத்துவர்களை அணுகி உரிய சிகிச்சையை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்றனர். உயிரிழந்த அற்புதராஜின் குடும்பத்தினருக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதாரத் துறை சார்பில் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!