நாளையும் மறுநாளும் 11 எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் மாற்றம்!

சென்னையில் முக்கிய ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக நாளை மற்றும் நாளை மறுநாள் 11 ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் நாளை சென்ட்ரலுக்கு வரவேண்டிய ஆலப்புழா தன்பாத் விரைவு ரயில் பெரம்பூரில் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே நேரத்தில் சென்ட்ரலுக்கு வரவேண்டிய கொச்சுவேலி, கொரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில்களும் பெரம்பூரில் நிறுத்தப்படும்.
நாளை மறுநாள் சென்னை சென்ட்ரல் வரவேண்டிய ஏற்காடு விரைவு ரயில் ஆவடி வரை இயக்கப்பட உள்ளது. சென்னை சென்ட்ரல் -பெங்களூரு இடையே இயக்கப்படும் அதிவேக ரயில் ஆவடி வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் சென்னை சென்ட்ரல் வர வேண்டிய ஆலப்புழா விரைவு ரயில் திருவள்ளூர் வரை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!