ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிக் கொண்ட பெண்... நெஞ்சை உறைய வைக்கும் வீடியோ!
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே உள்ள தவுண்ட் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண் ஒருவர் எவ்வித காயமுமின்றி உயிர் தப்பிய மயிர்க்கூச்சரியும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரயில் நிலையத்தில் நடைமேடையைக் கடக்க முயன்றபோது, எதிர்பாராதவிதமாக அவர் தண்டவாளத்தில் விழுந்துள்ளார். அதே சமயம் அந்தப் பாதையில் அதிவேகமாக வந்த ரயில், அந்தப் பெண்ணின் மேலே ஓடியதால் அங்கிருந்த பயணிகள் அனைவரும் அலறியடித்துக் கொண்டு பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
अचानक मालगाडी सुरू; रूळ ओलांडताना महिला घाबरून मध्यभागी झोपली, पाटस रेल्वे स्थानकातील घटना#pune #patas #railway #government #women pic.twitter.com/FYMWsaLBPF
— Lokmat (@lokmat) May 9, 2026
ரயில் முழுவதுமாகக் கடந்து செல்லும் வரை அந்தப் பெண் தண்டவாளத்தின் நடுவே அசையாமல் படுத்துக் கொண்டதால், ரயிலின் சக்கரங்கள் அவர் மீது படாமல் தப்பின. சுமார் 2 நிமிடங்கள் நீடித்த இந்த மரணப் போராட்டத்தின் இறுதியில், ரயில் சென்ற பிறகு அந்தப் பெண் எவ்வித காயமுமின்றி எழுந்து வந்ததைக் கண்ட அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் உறைந்தனர். கடவுளின் அருளால் மட்டுமே அந்தப் பெண் உயிர் பிழைத்ததாக அங்கிருந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த ரயில்வே பாதுகாப்புப் படையினர், அந்தப் பெண்ணை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ரயில் நிலையங்களில் நடைமேம்பாலங்களைப் பயன்படுத்தாமல் தண்டவாளத்தைக் கடப்பது உயிருக்கு ஆபத்தானது என்று அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர். தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ, ரயில் பயணங்களின் போது எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை மீண்டும் ஒருமுறை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது.
