திருச்சி மதுரை ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்... விவசாயிகள் போராட்டம்!

 
விவசாயிகள் போராட்டம்

கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடுரோட்டில் மண்டை ஓடுங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி அய்யாக்கணு இன்று திருச்சியில், டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடி வருகிறார்.

தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 8 பெண்கள் உட்பட 28 விவசாயிகள் திருச்சி காவிரி ஆற்றில் உள்ள ரயில்வே பாலத்தின் நடுப்பகுதியில் போய் நின்று கொண்டு ரயில் மறியல் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

விவசாயி அய்யாக்கண்ணு

இரண்டு கரைகளிலும் வந்து சேர்ந்த போலீசார் பாலத்தின் நடுவே போய்  அவரை மல்லுக்கட்டினால் ஆற்றுக்குள் விழுந்து பிரச்சனை ஏற்பட்டு விடுமோ என்று அஞ்சி கரையிலேயே நிற்கிறார்கள்.

ரயில் தண்டவாளம்

இதனால் சென்னையிலிருந்து மதுரை நோக்கியும் மதுரையிலிருந்து சென்னை நோக்கியும் செல்ல வேண்டிய அனைத்து ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!

பாதாள அறையில் சாய்பாபா! ஷீரடி போகும் போது இதை மிஸ் பண்ணாதீங்க!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web