தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் ... தவெக தலைவர் விஜய்!

 
விஜய்

 
 
தவெக 2வது மாநில மாநாடு முதலில்  ஆகஸ்ட் 25ம் தேதி  நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.   காவல்துறையினர், விநாயகர் சதுர்த்தி பண்டிகையை காரணம் காட்டி, மாநாட்டை வேறு தேதியில் நடத்தும்படி கேட்டதை தொடர்ந்து தேதி  மாற்றம் செய்யப்பட்டது.
தவெக மாநாடு  ஆகஸ்டு 21ம் தேதி  வியாழக்கிழமை  மாலை 4.00 மணிக்கு   ஏற்கனவே அறிவித்த அதே மதுரையில்  அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது. மாநாடு நடைபெறுவதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.  

 தவெக
இது குறித்து அவர் தனது பதிவில் ” நம்மோட அரசியல் பயணத்துல அடுத்தடுத்த கட்டங்களத் தாண்டி வர்றோம்… இடையில எத்தனை சவால்கள், நெருக்கடிகள் வந்தாலும் எல்லாத்தையும் மக்கள் சக்தியோட அதாவது உங்க ஆதரவால் கடவுளோட அருளால கடந்து வந்துகிட்டே இருக்கோம்…  2026 சட்டமன்றத் தேர்தலுக்கு நாம முழு வீச்சுல தயாராகிட்டு வர்றோம்… இந்நிலையில்  2வது மாநில மாநாட்ட ஆகஸ்ட் 21 ம் தேதி  வியாழக்கிழமை மதுரை, பாரப்பத்தியில நாம நடத்த இருக்கிறது உங்க எல்லாருக்கும் தெரிஞ்சதுதான்.
முத்தமிழையும் சங்கம் வச்சு வளர்த்த மதுரையில், நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து நின்னு. ஜனநாயகப் போர்ல அவங்கள் வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சிய நிறுவுவதே நம்ம குறிக்கோள் என்ற நிலைப்பாட்டை உறுதி செய்யறதுதான் இந்த மாநாடு…

தவெக
அதனாலதான் வைகை மண்ணில் நடக்கும் இந்த மாநாடு, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற தேர்தல் அரசியல் மையக்கருத்த முன் வச்சி நடக்க இருக்குதுன்னு உங்களோட பகிர்ந்துக்கிறதுல ரொம்ப மகிழ்ச்சி… மாநிலம் அதிர மாநாட்டிற்குத் தயாராவோம். மாற்று சக்தி நாமன்று. முதன்மை சக்தி நாம் என்பதை உலகிற்கு மீண்டும் உணர்த்துவோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்” எனவும் தன்னுடைய அறிக்கையில் த.வெ.க தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.