ரயிலில் மோதி அடுத்தடுத்து இருவர் பலி!! சோதனை ஓட்டத்தில் சோகம்!!

 
ரயில்


மதுரையில் இருந்து தேனி மாவட்டம் போடி வரை அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் தற்போது மதுரை- போடி அகல ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நேற்று முன் தினம் மாலை 4.45 மணிக்கு மூன்று பெட்டிகள் கொண்ட ரயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை ஓட்டம் நடத்தினர். தேனி பங்களாமேடு அருகே சென்றபோது, தண்டவாளத்தைக் கடந்த ஆண்டிபட்டி கணேசபுரத்தை சேர்ந்த லட்சுமி (45) என்பவர் மீது ரயில் மோதியது. இதில் அவர் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

ரயில்


அதேபோல, சோதனை ரயில் போடியில் இருந்து மதுரைக்கு மாலை 6.30 மணிக்கு சோதனை ஓட்டமாக திரும்பி வந்தது. தேனி - மதுரை ரோடு ராஜாகுளம் கண்மாய் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெரியகுளம் வடகரையைச் சேர்ந்த ராஜா (19) மீது சோதனை ஓட்டம் சென்ற ரயில் மோதியதில், அவர் உயிரிழந்தார். இருசம்பவங்கள் குறித்தும் மதுரை ரயில்வே போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

ரயில்


இதனிடையே, திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டையில் அடையாளம் தெரியாத 25 வயது மதிக்கத்தக்க பெண்ணும், வளத்துாரில் வசந்தா, 69, என்ற மூதாட்டியும் தண்டவாளத்தில் உடல் நசுங்கி இறந்து கிடந்தனர். தண்டவாளத்தை கடந்தபோது, ரயிலில் அடிபட்டு உயிரிழ்ந்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிந்தது.ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

From around the web