காட்டு பகுதியில் அமர்ந்து போதை ஊசி பயன்படுத்திய இருவர்.. தட்டி தூக்கிய போலீஸ்!

 
 முகமது பைசல் - சதாம் உசேன்

திருப்பூர் பனியன் நிறுவனங்களில் ஏராளமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் போதைக்கு அடிமையாக மலிவான வலி நிவாரணிகளைப் பயன்படுத்துவதாகவும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, திருப்பூர் நகர காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நேற்று இரவு பழனியம்மாள் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரே உள்ள காட்டுப் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் 2 பேர் அமர்ந்திருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தெற்கு போலீசார், 2 பேரையும் பிடித்து விசாரித்ததில், அவர்களிடம் போதை மற்றும் வலி நிவாரணி மருந்துகள் இருப்பது தெரியவந்தது. அவர்கள் பெரிய தோட்டம் பகுதியைச் சேர்ந்த முகமது பைசல் (25) மற்றும் முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த சதாம் உசேன் (35) என்பதும், இருவரும் பனியன் நிறுவனத்தில் தையல்காரர்களாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. ஆன்லைனில் மொத்தமாக வலி நிவாரணிகளை வாங்கி, அவர்களிடமிருந்து போதை மருந்துகளை தயாரித்து, போதைக்கு அடிமையாக்க அவர்களின் உடலில் ஊசி மூலம் செலுத்தியதும் தெரியவந்தது.

கைது

அவர்கள் மற்றவர்களுக்கு போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்ததும் கண்டறியப்பட்டது. அவர்களிடமிருந்து 30 மாத்திரைகள் மற்றும் போதைப் பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து முகமது பைசல் மற்றும் சதாம் உசேன் ஆகிய இருவரை கைது செய்துள்ளனர். போதை ஊசிகளை வாங்கியவர்களின் விவரங்களைப் பெற்று, அவர்களிடம் போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web