வைரல் வீடியோ!! அண்டர்டேக்கர் ப்ரீ வெட்டிங் சூட்!!
திருமணத்திற்கு முந்தைய ப்ரீ வெட்டிங் ஷூட்கள் தான் இப்போதைய லேட்டஸ்ட் ட்ரெண்டிங். இதனை ஒரு அட்டகாசமான ஆல்பமாக திட்டமிட்டு தயாரிக்கின்றனர். கிட்டத்தட்ட கல்யாணசெலவுக்கு சமமாக இதற்கும் செலவிடுகின்றனர். இந்த போட்டோஷூட்கள் அசத்தலான இடங்களில் அல்லது கடற்கரையில் படம் பிடிக்கப்படுகின்றன. ஆற்றில் படகில் அமர்ந்து போட்டோ சூட், ஏன் தண்ணீருக்கு அடியில் கூட போட்டோ சூட் என இதற்காக லட்சக்கணக்கில் செலவு செய்து வருகின்றனர்.அந்த வகையில் தற்போது ஒரு ப்ரீ வெட்டிங் போட்டோ ஷூட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The "Undertaker" PreWedding shoot😭😭😭😭 pic.twitter.com/36MPqgJIji
— Hasna Zaroori Hai 🇮🇳 (@HasnaZarooriHai) July 26, 2023
இந்த வீடியோவில் பதிவிட்டவர் The "Undertaker" PreWedding shoot என்று குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோ சில மணி நேரங்களில் வைரலாகி ஒரே நாளில் கிட்டத்தட்ட 6 லட்சம் பேர் வரை வீடியோவை பார்த்துள்ளனர். அந்த வீடியோவில் மணமகள் பிங்க் நிற கவுன் மற்றும் மணமகன் சாதாரணமாக நீல நிற ஜீன்ஸ் மற்றும் பிங்க் நிற டி ஷர்ட் அணிந்துள்ளார். ரப்பர் தோட்டத்தில் வீடியோ எடுக்கப்பட்டது. வீடியோவின் ஆரம்பத்தில், மணமகனும், மணமகளும் நேருக்கு நேர் நிற்கிறார்கள். மணமகள் மணமகனின் தோள் மீது கால்களை வைக்க முயற்சி செய்கிறாள். அவரால் ஏறமுடியவில்லை. இப்படி மணமகள் சிரமப்படும் நேரத்தில் மலையாள சினிமாவில் இருந்து சில நகைச்சுவை வசனங்கள் இடம்பெற்றுள்ளன.
இறுதியாக மணமகள் ரப்பர் மரத்தின் உதவியுடன் மணமகனின் தோளில் ஏற முயன்று தோல்வியடைந்தார். பின்னர், கேமரா உதவியாளர் உதவியுடன், மணமகன் தனது தோளில் மணமகளை தூக்குகிறார். பின்னர் மணமகனின் தோளில் காலை தொங்கவிட்டபடி தலைகீழாக படுத்திருக்கும் மணமகளின் புகைப்படம் வருகிறது.இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் பலரும் இதுகுறித்து “இந்த படத்திற்கான போராட்டத்தை வீடியோவில் பார்த்தோம். “தி அண்டர்டேக்கர் இதைப் பற்றி பெருமிதம் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொரு பயனர் “திருமணத்தின் கேலிக்கூத்து” என்று குறிப்பிட்டுள்ளார். இதே போல் பலரும் தங்களின் ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?