UNION BUDGET 2023: விவசாயிகளுக்கான கடன் ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு.. நிர்மலா சீதாராமன் !!

 
budget

2023-24-ம் நிதியாண்டிற்கான ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த ஆண்டும் நாடாளுமன்றத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 5-வது முறையாக ஒன்றிய அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 

ஒன்றிய பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறிதாவது, விவசாயிகள், பெண்கள் உட்பட அனைவருக்கும் பயனளிக்கும் வகையிலான வளர்ச்சியை உருவாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது என உலகமே அங்கீகரித்துள்ளது.

இந்தியாவின் சாதனைகளை உலகமே பாராட்டுவதால் தலை நிமிர்ந்து பட்ஜெட் தாக்கல் செய்கிறேன். வறட்சி சமாளிப்பு, குடிநீர் வசதி, விவசாயிகளுக்காக கர்நாடகாவுக்கு ரூ.5,300 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும். பழங்குடியினர் மேம்பாட்டுக்காக ரூ.15,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஐ.சி.எம்.ஆர். பரிசோதனை நிலையங்களை தனியாரும் பயன்படுத்த வழிவகை செய்யப்படும். விவசாயிகளுக்கான கடன் தொகை ரூ.20 லட்சம் கோடியாக அதிகரிப்பு.  

கிராமப்புற பகுதிகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்க அரசு உறுதுணையாக இருக்கும். புதிதாக 157 நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும். மீனவர்கள், மீன் விற்பனையாளர்கள், மீன் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ளோர் வளர்ச்சிக்கு ரூ.6,000 கோடி ஒதுக்கீடு என பட்ஜெட் தாக்கலின்போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

From around the web