ட்ரம்ப் முதல் கையெழுத்து ... அமெரிக்கா WHOலிருந்து விலகல்!

சமீபத்தில் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ட்ரம்ப் வெற்றி பெற்று அமெரிக்காவின் 47வது அதிபராக நேற்று ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் பதவியேற்கும் விழாவானது வாஷிங்டன் டிசி-யில் அரங்கில் நடைபெற்றது.
கோலாகலகமாக நடைபெற்ற இந்த விழாவில் முன்னாள் அதிபர்கள் ஜோ பைடன், பாரக் ஒபாமா என எதிர்க்கட்சி அரசியல் தலைவர்கள் , பன்னாட்டு தொழிலதிபர்களான எலான் மஸ்க், சுந்தர்பிச்சை என பலர் கலந்து கொண்டனர். அதிபராக டொனால்ட் டிரம்ப் பொறுப்பேற்று கொண்டதையடுத்து சில முக்கிய விவகாரங்களில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார்.
அதன்படி
அமெரிக்காவில் ஆண் – பெண் என்ற இரு பாலினம் மட்டுமே இனி அங்கீகரிக்கப்படும். சிறார் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்கு தடை செய்யப்படுவதாகவும், ராணுவத்தில் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு தடை எனவும் அதற்கான உத்தரவு கடிதத்தில் கையெழுத்திட முடிவு செய்துள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் பேசினார்.
அதே போல் உலக சுகாதார மையத்தில் இருந்து அமெரிக்கா வெளியேறுவதற்கான உத்தரவு கடிதத்தில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டார். கொரோனா காலகட்டத்தில் அமெரிக்காவிடம் இருந்து பெரும் பங்கு நிதியினை பெற்றுக்கொண்டு பேரிடர்களை சரியாக கையாள WHO தவறிவிட்டதாக கூறியுள்ளார்.
ஆட்சிக்கு வந்தவுடன் WHOல் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்துள்ளார். அதே போல் வெளியுறவுக் கொள்கையில் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும், அமெரிக்காவில் தற்காலிக விசா வைத்திருப்பவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள், பிறப்பால் அமெரிக்கர் என்ற குடியுரிமையை பெற முடியாது. அதேபோல சட்டவிரோதமாக நுழைந்தவர்களும் அமெரிக்க குடியுரிமை கிடையாது என அறிவித்துள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!