தமிழகத்தில் வரலாறு காணாத வாக்குப்பதிவு - மாவட்ட வாரியான இறுதி வாக்குப்பதிவு விவரங்கள்!

 
வாக்குப்பதிவு வாக்காளர்கள் வாக்குப்பதிவு வாக்காளர்கள்

தமிழகத்தில் நேற்று நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மாநிலம் முழுவதும் வரலாறு காணாத வகையில் 84.69% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த 2021 தேர்தலை விட (73.63%) சுமார் 11 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூர் மாவட்டத்தில் 85.50 சதவீத வாக்குகளும், செங்கல்பட்டில் 84.42 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. தலைநகர் சென்னையில் 83.27 சதவீதமும், கோவையில் 84.47 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. கடலூரில் 84.74 சதவீதமும், தருமபுரியில் மிக அதிகமாக 89.96 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு வாக்கு பீகார் தேர்தல்

திண்டுக்கல்லில் 88.42 சதவீதமும், ஈரோட்டில் 89.89 சதவீதமும், கள்ளக்குறிச்சியில் 87.12 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. காஞ்சிபுரத்தில் 86.96 சதவீதமும், கன்னியாகுமரியில் மிகக் குறைவாக 75.53 சதவீதமும் பதிவாகியுள்ளது. கரூரில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 92.15 சதவீத வாக்குகள் பதிவாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் 84.80 சதவீதமும், மதுரையில் 80.31 சதவீதமும், மயிலாடுதுறையில் 81.27 சதவீதமும், நாகப்பட்டினத்தில் 85.56 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. நாமக்கல்லில் 89.51 சதவீதமும், பெரம்பலூரில் 85.28 சதவீதமும், புதுக்கோட்டையில் 83.45 சதவீதமும், ராமநாதபுரத்தில் 76.33 சதவீதமும் பதிவாகியுள்ளன.

ராணிப்பேட்டையில் 88.75 சதவீதமும், சேலத்தில் 90.30 சதவீதமும், சிவகங்கையில் 76.18 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. தென்காசியில் 81.72 சதவீதமும், தஞ்சாவூரில் 80.15 சதவீதமும், நீலகிரியில் 78.54 சதவீதமும், தேனியில் 81.00 சதவீதமும் பதிவாகியுள்ளன.

வாக்குப்பதிவு வாக்காளர்கள்

திருவள்ளூரில் 83.11 சதவீதமும், திருவாரூரில் 83.07 சதவீதமும், தூத்துக்குடியில் 80.03 சதவீதமும், திருச்சியில் 85.23 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. திருநெல்வேலியில் 77.53 சதவீதமும், திருப்பத்தூரில் 88.05 சதவீதமும், திருப்பூரில் 88.30 சதவீதமும் பதிவாகியுள்ளன. திருவண்ணாமலையில் 88.24 சதவீதமும், வேலூரில் 87.98 சதவீதமும், விழுப்புரத்தில் 87.85 சதவீதமும், விருதுநகரில் 84.33 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த முறை கரூர், சேலம் மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்கள் வாக்குப்பதிவில் முன்னிலை பெற்றுள்ளன. பதிவான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் தற்போது 62 மையங்களில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.