UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு... நான் முதல்வன் திட்டத்தில் படித்த 50 பேர் தேர்ச்சி!

 
 UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு

யுபிஎஸ்இ சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள்  இன்று வெளியிடப்பட்டுள்ளன. https://upsc.gov.in/ என்ற இணையதளத்தில் தேர்வர்கள் முடிவுகளை தேர்வர்கள் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று வெளியான இறுதி தரவரிசைப் பட்டியலில் மொத்தமாக 1,009 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

 UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் வசித்து வரும் சக்தி துபே என்ற மாணவி முதலிடம் பெற்றுள்ளார். ஹர்ஷிதா கோயல் என்பவர் 2-ம் இடமும், டோங்க்ரே அர்ஷித் பராக் என்பவர் 3-ம் இடமும் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றவர்களில் 335 பேர் பொதுப்பிரிவினர், 109 பேர் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர், 318 பேர் ஓபிசி, 160 பேர் எஸ்சி, 87 பேர் எஸ்டி, 45 பேர் மாற்றுத்திறனாளிகள். 

தமிழகத்தில் சிவச்சந்திரன் என்ற மாணவர் முதலிடமும், அகில இந்திய அளவில் 23ம் இடமும் பெற்றுள்ளார். இவர் தமிழக அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர். 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் படித்த 50 பேர் இத்தேர்வில் தேர்ச்சி பெற்று இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற மோனிகா, தேசிய அளவில் 39வது இடம் பிடித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web