உத்தரகண்ட் முதல்வர் மகா கும்பமேளாவில் புனித நீராடல்!

 
உத்தரகண்ட்

உத்தரப்பிரதேச மாநிலத்தில்  பிரயாக்ராஜில் மகா கும்பமேளா  பெளஷ பெளர்ணமி நாளில்  ஜனவரி 13ம் தேதி தொடங்கியது. இந்நிகழ்வு, பிப்ரவரி 26ம் தேதி வரை நடைபெறவுள்ளது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதல்வர் யோகி ஆதித்யநாத், எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட்டோர்  வெவ்வேறு நாள்களில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியுள்ளனர்.இந்நிலையில், இன்று காலை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு புனித நீராடியிருக்கும்  நிலையில், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி குடும்பத்தோடு புனித நீராடியுள்ளார்.

திரௌபதி முர்மு


இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பதிவில்  2025 மகா கும்பமேளாவில்  கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி 3 புனித நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் தாய், மனைவி மற்றும் மகனுடன் நீராடியது எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.மறக்க முடியாத தருணம். மூன்று பண்டைய நதிகளின் சங்கமத்தில் புனித நீராடியப் பிறகு ஆன்மிக தூய்மை மற்றும் தெய்வீகத்தின் தனித்துவமான அனுபவத்தைப் பெற்றதாகக் கூறியுள்ளார்.  ஹரித்வாரில் 2027ல் நடைபெறவுள்ள கும்பமேளாவிற்கான ஏற்பாடுகள் குறித்து பேசிய அவர், பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவைப் போல வரலாற்று சிறப்புமிக்கதாக மாற்ற திட்டமிடல் நடந்து வருகிறது. பக்தர்களுக்கு தெய்வீக அனுபவத்தை உறுதி செய்வதற்காக அனைத்து சாத்தியமான வசதிகளும் வழங்கப்படும்” என உறுதியளித்தார்.

உத்திரப்பிரதேசம்


பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராட என் தாயாரை அழைத்துச் செல்லும் அதிர்ஷ்டம் எனக்குக் கிடைத்துள்ளது. என் வாழ்வில் வார்த்தைகளால் விவரிக்க முடியாத விலைமதிப்பற்ற மற்றும் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களில் இதுவும் ஒன்று. என் இதயத்தில் என்றென்றும் பதிந்திருக்கும் என கூறியுள்ளார்.  தெலங்கானா சாலைகள் மற்றும் கட்டடங்கள் அமைச்சர் கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி திங்கட்கிழமை புனித நீராடினார்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!