பகீர்!! கணவர்,2 குழந்தைகளை தவிக்க விட்டு காதலருடன் குவைத்திற்கு ஓடிய தாய்!!
ராஜஸ்தான் மாநிலம், துங்கர்பூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் முகேஷ். இவரது மனைவி தீபிகா படிதார். இவர்களுக்கு ஒரு ஆண், ஒரு பெண் குழந்தைகள் . மும்பையில் பணிபுரிந்து வரும் முகேஷ், தனது மனைவி தீபிகாவை காணவில்லை என ஜூலை 15ம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குஜராத் ஹிம்மத் நகரில் வசிக்கும் இர்பான் ஹைதரை சந்திக்க தீபிகா அடிக்கடி கேத் பிரம்மாவுக்கு பயணம்செய்தது தெரிய வந்தது.
இந்நிலையில், தீபிகாவை அழைத்துக்கொண்டு ஹைதர் குவைத்திற்குத் தப்பியிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சந்தேகத்தின் பேஎரில் படிதார் சமூகம் மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் ஆட்சியர், காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் பர்தா அணிந்திருந்த தீபிகாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவின. இதனை கண்டு அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்நிலையில் தனது மனைவியை இர்பான் இஸ்லாம் மதத்திற்கு மாறத் தூண்டியதாக முகேஷ் புகார் தெரிவித்துள்ளார். தீபிகா, ஹைதரைச் சந்தித்தது மற்றும் குவைத்துக்கு விசா கிடைத்தது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது . கணவர், 2 குழந்தைகளைத் தவிக்க விட்டு விட்டு காதலனுடன் குவைத்திற்கு பெண் தப்பிச் சென்ற விவகாரம் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?