சினிமா காலாவதியானவர்கள் அரசியலுக்கு வந்து அங்கீகாரம் தேடுகின்றனர்.... திருமா சர்ச்சை கருத்து!

 
திருமா விஜய்

 தமிழகத்தில் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் பட்டாசு தொழிற்சாலையில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது . இதில் பரிதாபமாக உயிரிழந்த  திருமலர், திருமஞ்சு, செண்பகம்  குடும்பத்தினரை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கினார்.

விஜய்  ஜனநாயகன்
அங்கு பேசிய  திருமாவளவன் ” 10 வருடங்கள் தேர்தல் அரசியல் வராமல் மொத்தத்தில் 35 ஆண்டுகள் ஒரு மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை பெறுவதற்கே பெரும்பாடு பட நேர்ந்தது. சிலபேர் 50 -60 வயது வரவேண்டும் அதுவரை சினிமாவில் நடிச்சி புகழை தேடி, பொருளை தேடி, சுகத்தை தேடி, சொகுசாக வாழ்ந்துவிட்டு இளமை காலத்தையெல்லாம் சொகுசாக கழித்துவிட்டு தேவையான அளவுக்கு சொத்து சேர்த்து வைத்து கொண்டு காலாவதியான பிறகு அரசியலுக்கு வந்து அங்கீகாரமும் பெறுகிறார்கள்.

பாஜகவிற்கு தோல்வி பயம்! தொல்.திருமா அனல் பறக்கும் குற்றச்சாட்டு!
அப்படி வருபவர்கள் ஊரு ஊராக சென்று இப்படி அலையவேண்டியது இல்லை.  ஊரு ஊராக  சென்று கொடியேற்ற தேவையில்லை. ஊரு ஊராக சென்று மக்களை சந்தித்து அவர்களிடம் பேசவேண்டியது இல்லை. உடனடியாக கட்சியை தொடங்கலாம் அதன்பிறகு ஆட்சிக்கு போகலாம் என நினைக்கிறார்கள். நான் மிகவும் கடினமாக உழைத்திருக்கிறேன். சாப்பிட வேண்டிய நேரத்தில் சாப்பிடாமல் ..தூங்கவேண்டிய நேரத்தில் சரியாக தூங்காமல் நான் 35 ஆண்டுகள் உழைத்த பிறகே விசிக அங்கீகாரம் பெற்ற கட்சியாய் மாறியிருக்கிறது” என தெரிவித்தார்.


அதனைத்தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்தும் திருமாவளவன் பேசினார். இது குறித்து பேசிய திருமா” நடைபெறவுள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இல்லாமல் எந்த அரசியல் நகர்வும் இருக்காது. இதை நான் கர்வத்தோடு சொல்லவில்லை அரசியல் வல்லுநர்களே ஆராய்ந்து சொல்லி இருக்கிறார்கள். கொள்கையில் தெளிவு இருப்பதால் எந்த கொம்பனாலும் என்னை விலைக்கு வாங்க முடியாது ” என திருமாவளவன் தெரிவித்தார்.

From around the web