ஆகஸ்ட் 5ம் தேதி விஜய் மக்கள் இயக்க வழக்கறிஞர்கள் கூட்டம்!! அடுத்த அரசியல் மூவ் !!

 
விஜய்

இளைய தளபதி நடிகர் விஜய் சமீபகாலமாக விஜய் மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். இதுஅரசியலுக்குள் நுழைவதற்கு  ஆயத்தங்கள் தான் என்கின்றனர் பெரும் அரசியல்வாதிகள். இதன் அடிப்படையில் தான் முதற்கட்டமாக தனது விஜய் மக்கள்  இயக்கத்தை வலுவான கட்டமைப்பு கொண்டதாக மாற்றி அமைத்து வருகிறார். பனையூரில்   தனது அலுவலகத்தில் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவ்வப்போது சந்தித்து ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.

ஆரம்பிச்சுட்டாய்ங்க...! வாக்காளர்களின் காலில் விழுந்து நன்றி தெரிவித்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகி!


 இதன்படி மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள், மாணவர்களுடன் சந்திப்பு, ஏழைகளுக்கு உணவளித்தல்  என சமூகப் பணிகளும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.  காமராஜர் மற்றும் அம்பேத்கர் பிறந்த நாளில்  சிலைகளுக்கு  மரியாதை செய்யும் அரசியல் பணிகளும் தொடர்கின்றன.  இந்த வரிசையில் தற்போது  அடுத்ததாக தனது மக்கள் இயக்க வழக்கறிஞர்களை  சந்திக்கிறார் நடிகர் விஜய். ஆகஸ்ட் 5 ம் தேதி பனையூரில்   அரசியல் இயக்கத்திற்கான கட்டமைப்புகள் குறித்து வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடைபெறும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்

சமீபத்தில்   திருச்சியில் விஜய்  மக்கள் இயக்க நிர்வாகி ஒருவர் விபச்சார வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ளதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய சம்பவங்களில்   விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஈடுபடுவதை தடுக்கவும்,  நடந்து விட்டால் அவற்றை சமாளிப்பது குறித்தும் விரிவான   ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!

ஆடி மாதத்தில் புதுமணத் தம்பதியரை ஏன் பிரித்து வைக்கிறார்கள் தெரியுமா?

மாங்கல்ய தோஷம் நீங்க ஆடி மாசத்துல இதைச் செய்ய மறக்காதீங்க!

From around the web