அடுத்தடுத்து அதிரடி... தனித்தனியாக மாவட்ட பொறுப்பாளர்களை சந்திக்கும் விஜய்!

 
விஜய்


 தமிழகத்தில் 2026ல்  சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் இப்போது முதலே களப்பணியில் இறங்கியுள்ளன. அந்த வகையில் தவெக தலைவர் விஜய் தீவிரமாக அரசியல் நகர்வுகளை அடுத்தடுத்து உத்வேகத்துடன் முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் இன்று மாவட்ட பொறுப்பாளர்களை தனித்தனியாக சந்திக்கும் விஜய், எஞ்சிய சில மாவட்டங்களுக்கு பொறுப்பாளர்களை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்


விஜய் தனது கட்சியில் பல்வேறு கட்டமைப்புகளை அமைத்து, கட்சியை வலுப்படுத்தி வருகிறார் .இந்நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் அடுத்தகட்ட திட்டம் தொடர்பாக கட்சி தலைமை மாவட்ட நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

விஜய்
தவெக  தனது நிர்வாக வசதிக்காக, 120 கட்சி மாவட்டங்களாக பிரித்து நிர்வாகிகளை நியமித்து வருகிறது. இதுவரையில் 96 கட்சி மாவட்டங்களுக்கான பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  எஞ்சிய 24 கட்சி மாவட்டங்களுக்கான புதிய பொறுப்பாளர்களை அறிவிக்க இருப்பதாகத் தகவல் வெளியான நிலையில், புதிதாக நியமிக்கப்படும் மாவட்ட பொறுப்பாளர்களுடன், தனித்தனியே இன்று விஜய் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  

From around the web