எம்.எல்.ஏ முதல் அமைச்சர் வரை... அமைச்சர் புஸ்ஸி ஆனந்தின் அசுர அரசியல் வளர்ச்சி!

 
விஜய் விஜய்

அரசியல் களத்தில் தனக்கென ஒரு தனி முத்திரையைப் பதித்துள்ள புஸ்ஸி ஆனந்தின் அசுர அரசியல் பயணம் முதன்முதலில் அண்டை மாநிலமான புதுச்சேரியில்தான் தொடங்கியது. கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில், புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சியின் சார்பில் ‘புஸ்ஸி’ தனித் தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலத்த வேட்பாளரை அதிரடியாக வீழ்த்தி, முதன்முறையாகத் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை அலங்கரித்தார்.

விஜய் ஆனந்த் புஸ்ஸி

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய காலத்திலிருந்தே நடிகர் விஜய்யின் அகில இந்தியத் தலைமை ரசிகர் மன்றப் பொறுப்பாளராக இணைந்து தீவிரமாகப் பயணித்து வந்தார். அதனைத் தொடர்ந்து கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி அன்று நடிகர் விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற புதிய அரசியல் கட்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியபோது, அதன் முதல் பொதுச்செயலாளராகப் புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டார். கட்சியின் வளர்ச்சிப் பணிகளுக்காகத் தமிழகம் முழுவதும் அல்லும் பகலும் அயராது உழைத்துத் தவெகவின் தூணாக விளங்கினார்.

விஜய் புஸ்ஸி ஆனந்த்

கட்சியின் பொதுச்செயலாளராகத் தீவிரமாகக் களப்பணியாற்றிய அவர், தற்போதைய சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் தலைநகரமான சென்னையின் முக்கியத் தொகுதியில் போட்டியிட்டுப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரானார். அதன் தொடர்ச்சியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய அமைச்சரவை இன்று பொறுப்பேற்றுள்ள நிலையில், அவரும் மாண்புமிகு அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். கடந்த 2006 இல் புதுச்சேரி எம்.எல்.ஏ-வாகத் தொடங்கித் தற்போது 2026 இல் தமிழகத்தின் சக்திவாய்ந்த அமைச்சராக உயர்ந்துள்ள அவரது இந்த அரசியல் வளர்ச்சி தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.