BREAKING... முதல்வர் விஜய் உடனான விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றார் சங்கீதா!
தமிழக முதல்-அமைச்சரும், தனது கணவருமான விஜய்யிடம் விவாகரத்து கோரி தாக்கல் செய்திருந்த மனுவைச் சங்கீதா தற்போது முழுமையாக வாபஸ் பெற்றுள்ளார். லண்டனில் இருந்து வீடியோ கான்பிரன்ஸ் மூலம் செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் ஆஜரான அவர், இந்த வழக்கை தொடர விருப்பமில்லை என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தார். இதனைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம் சங்கீதா தாக்கல் செய்திருந்த விவாகரத்து வழக்கினை அதிகாரப்பூர்வமாக முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.
விஜய் மற்றும் சங்கீதாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல கோர்ட்டில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணைக்கு வந்தபோது இருவரும் நேரில் ஆஜராகாமல் வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராகியிருந்த நிலையில், பிரபலங்கள் என்பதால் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராக அனுமதி கோரப்பட்டது. கடந்த ஜூன் 15-ம் தேதி நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதி இருவரையும் சமரச மையத்துக்கு அனுப்ப வேண்டும் என்று கருத்து தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார்.
இதன்படி இன்று நடைபெற்ற விசாரணையின்போது சட்டமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றிருந்ததால் முதல்-அமைச்சர் விஜய் நேரில் ஆஜராக முடியவில்லை என்று அவரது தரப்பு வழக்கறிஞர் எடுத்துரைத்தார். அதே நேரத்தில் லண்டனில் இருந்த சங்கீதா வீடியோ கான்பிரன்ஸ் மூலம் ஆஜராகி தனது விவாகரத்து மனுவை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தத் திடீர் திருப்பத்தால் குடும்ப நல வழக்கு முடிவுக்கு வந்ததுடன் அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்களிடையேயும் பெரும் நிம்மதியும் ஆச்சரியமும் ஏற்பட்டுள்ளது.
