விராட் கோஹ்லி மட்டுமே கேப்டன்! இந்திய கிரிக்கெட் வாரியம்!

 
விராட் கோஹ்லி மட்டுமே கேப்டன்! இந்திய கிரிக்கெட் வாரியம்!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி. இவர் விரைவில் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பில் இருந்து விலக இருப்பதாக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
தனது பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக இதனை விராட் கோஹ்லியே தெரிவித்ததாக பிரபல ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டு இருந்தது. மேலும் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் பொறுப்பு ரோஹித் சர்மாவுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

விராட் கோஹ்லி மட்டுமே கேப்டன்! இந்திய கிரிக்கெட் வாரியம்!

அக்டோபர் -நவம்பர் மாதத்தில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை தொடருக்குப் பிறகு தனது பதவி விலகல் முடிவை விராட் கோஹ்லி அறிவிப்பார் எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில் இதனை முழுவதுமாக இந்திய கிரிக்கெட் வாரியம் மறுத்துள்ளது. இது குறித்து பிசிசிஐயின் பொருளாளர் விடுத்த செய்திக்குறிப்பில் , இந்த செய்தி முற்றிலும் தவறானது. ஊடகங்களில் மட்டுமே இவை விவாதிக்கப்பட்டு வருகின்றன.

விராட் கோஹ்லி மட்டுமே கேப்டன்! இந்திய கிரிக்கெட் வாரியம்!


இதுவரை டெஸ்ட் மற்றும் ஒருநாள்,20 ஓவர் அணிகளுக்குத் தனித்தனி கேப்டன்களை நியமிப்பது பற்றி இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு எந்த வித யோசனையும் கிடையாது. எல்லாப் போட்டிகளிலும் விராட் கோஹ்லியே கேப்டனாக நீடிப்பார் எனத் தெரிவித்துள்ளார்.

From around the web