திருச்சியில் திமுகவினர் அப்செட்... செத்தாலும் தனி சின்னத்தில் தான் போட்டியிடுவேன்... திமுகவினரை கதற விட்ட துரை வைகோ!

 
துரை வைகோ

இந்தியா கூட்டணியின் திருச்சி வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் துவங்கிய நடைபெற்றது. தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு கொண்டனர்.

இதில் சிறப்புரையாற்றிய துரை வைகோ, உங்களுக்கு எத்தனை சீட்டு கொடுக்க இருக்கிறார்கள்? கண்டிப்பாக சீட்டு கொடுப்பார்களா? என்று என்னிடத்தில் தொடர்ந்து கேள்வி எழுப்பினார்கள். நான்  அவர்களிடம் சீட்டே கொடுக்கவில்லை என்றாலும் இந்த அணியில் தான் நாங்கள் இருப்போம் என்றேன். நான் அரசியல் குடும்பத்தில் பிறந்திருக்கலாம் ஆனால் நான் அரசியல்வாதி அல்ல. கனவில் கூட நான் அரசியலுக்கு வருவேன் என்றும் எண்ணி பார்க்கவில்லை. 

துரை வைகோ

நான் ஆசைப்பட்டு இந்த கட்சிக்கு வரவில்லை வலுக்கட்டாயமாக எங்களது கட்சிக்காரர்கள் என்னை இந்த இடத்திற்கு கொண்டு வந்துள்ளனர். என் அப்பாவிற்கு முதுமை வந்து விட்டது. எங்க அப்பா ஒரு சகாப்தம். எங்க அப்பாவிற்கு தலை குனிவு வந்துவிடக்கூடாது என்பதற்காக நான் அரசியலுக்கு வந்து இருக்கிறேன்.

நான் சுயமரியாதைக்காரன் நான் செத்தாலும் நமது சின்னத்தில் தான் போட்டியிடுவேன் என்று கண்ணீர் சிந்தி கதறி அழுதார் துரை வைகோ. இதனால் அறிவாலயத்தில் கனத்த அமைதி ஏற்பட்டது. எங்கள் சின்னம் கிடைக்காவிட்டால் தொகுதியை துறந்து விட்டு 40 தொகுதிகளிலும் சுற்றிச்சுழன்று வருவேன் என்று பேசியமர்ந்தார். கூட்டத்திற்கு வந்திருந்த திமுகவினரே இந்த பேச்சைப் பெரிதாக ரசிக்கவில்லை.  என்னய்யா... இதெல்லாம் கூட்டணிக்குள்ள பேசி முடிவெடுத்தது தானே... இப்போ கூட்டத்துல தன்மான சிங்கம் மாதிரி எங்க சின்னம்னு பேசி,, இங்கே அமைச்சர் நேருவுக்காக மட்டும் தான் இவருக்கு ஓட்டுபோடுவாங்க..  கிடைக்கிற திமுக வாக்குகளையும் சிதறடிக்கிறாரே... என்றபடி முணுமுணுத்தனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

பங்குனி உத்திரத்தின் மகத்துவம் தெரிஞ்சுக்கோங்க..!

பங்குனி மாத பண்டிகைகள், விசேஷ நாட்கள்.... முழு பட்டியல்!

திடீர் ராஜ யோகத்தால் பணமழை கொட்ட போகும் 6 ராசிக்காரர்கள்

From around the web