வி.ஜே. பிரியங்கா கணவரைப் பிரிந்த காரணம்... திருமண வாழ்க்கையில் செய்த தவறு இது தானா?!

 
விஜே பிரியங்கா

விஜே பிரியங்கா, கணவரைப் பிரிந்தாரா என்பது தான் நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது. இந்நிலையில், திருமண வாழ்க்கையில் விஜே பிரியங்கா செய்த தவறு காரணமாக தன்னுடைய  கணவரைப் பிரிந்தாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.பிரபல தொகுப்பாளினியாக வலம் வரும் விஜே பிரியங்கா, நகைச்சுவையாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் ஸ்டைலுக்காகவே ரசிகர்களிடையே வெகு சீக்கிரத்தில் பாப்புலரானார். நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவதோடு, பிக் பாஸ் 6வது சீசனிலும் போட்டியாளராகப் பங்கேற்றார்.

விஜே பிரியங்கா
கடந்த 2016ல் விஜய் டிவியைச் சேர்ந்த பிரவீன் குமாருக்கும், விஜே பிரியங்காவுக்கும் காதல் திருமணம் நடந்த நிலையில், திருமணத்திற்கு பின்பும், தனது பர்சனல் வாழ்க்கைப் பற்றி பொதுவெளியிலும், நண்பர்களிடையேயும் அதிகளவில் பகிர்ந்து கொள்ளாமல் இருந்து வந்த பிரியங்கா, பிக் பாஸ் நிகழ்ச்சியிலாவது தனது கணவர் பற்றி பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் அதைப் பற்றிப் பேசவில்லை. 

விஜே பிரியங்கா


இதனால், தனது கணவரைப் பிரிந்து வாழ்கிறார் பிரியங்கா என்கிற செய்தி உறுதியாகி விட்டதாகவே பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், சமீபத்தியப் பேட்டி ஒன்றில் விஜே ப்ரியங்காவிடம் “முதலில் இருந்த வாழ்க்கையில் தவறு நடந்து விட்டது. இனிமேல் அமையும் வாழ்க்கையிலாவது எந்த தவறும் நடக்காமல் சந்தோஷமாக இருக்க வேண்டும். இதற்கு நீ சத்தியம் செய்து கொடுக்க வேண்டும்” என்று அவரது அம்மா அந்த பேட்டியின் போதே பிரியங்காவிடம் கேட்டிருக்கிறார்.
விஜே பிரியங்காவும், தனது தாய்க்கு கலங்கிய கண்களுடன் சத்தியம் செய்து கொடுத்திருக்கிறார். இதனால், அவர் கணவரைப் பிரிந்திருப்பது உறுதி என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

From around the web