வ.உ.சி பிறந்தநாள்...முதலமைச்சர் விஜய் புகழ் வணக்கம் !

 
வஊசி

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு முதலமைச்சர் விஜய் தனது சமூக வலைதளப் பதிவில் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார். ஆங்கிலேயர்களிடம் அரசியல் விடுதலை மட்டுமல்லாமல் பொருளாதார விடுதலையும் அவசியம் என்பதை வலியுறுத்தி சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் அவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பிறந்தநாள் #VOChidambaramPillai #VOC #DinakaranNews

இந்தியர்களின் தன்னம்பிக்கை மற்றும் தற்சார்பு உணர்வை வளர்த்தெடுத்ததுடன் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகவும் அவர் தீவிரமாகப் போராடியதாகப் புகழாரம் சூட்டியுள்ளார். வ.உ.சியின் தியாகம் மற்றும் தொண்டு நாட்டைச் சேர்ந்த அனைவருக்கும் என்றும் ஒரு முன்னுதாரணமாக விளங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pon Radhakrishnan's Video on X

தலைவர்களின் இதுபோன்ற வரலாற்றுச் சிறப்புகளை இளைய தலைமுறையினர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று பலரும் கூறி வருகின்றனர். வ.உ.சியின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு தரப்பினரும் அவருக்குத் தங்களது அஞ்சலியையும் மரியாதையையும் செலுத்தி வருகின்றனர்.