'ஜாகிர் உசேனுடன் சேர்ந்து பணியாற்றவில்லை... ஆல்பம் திட்டமிட்டிருந்தோம்...’ - ஏ.ஆர். ரஹ்மான் இரங்கல்
பிரபல தபேலா இசைக் கலைஞரும், இயக்குநர், நடிகருமான ஜாகிர் உசேன் உடல்நலக் குறைவு காரணமாக அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றிறவு உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Inna lillahi wa inna ilayhi raji'un.
— A.R.Rahman (@arrahman) December 16, 2024
Zakir Bhai was an inspiration, a towering personality who elevated the tabla to global acclaim 🌟🌍. His loss is immeasurable for all of us. I regret not being able to collaborate with him as much as we did decades ago, though we had planned…
இந்நிலையில் ஜாகிர் உசேன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "ஜாகிர் பாய் ஒரு இன்ஸ்பிரேஷன். தபேலா இசையை உலகளாவிய புகழுக்கு உயர்த்திய ஓர் ஆளுமை. அவரது இழப்பு நம் அனைவராலும் அளவிட முடியாதது. தசாப்தங்களுக்கு முன்பு நாங்கள் சேர்ந்து பணியாற்றியதைப் போல், சமீப காலங்களில் சேர்ந்து பணியாற்ற முடியாமல் போனதற்கு வருந்துகிறேன்.

விரைவில் நாங்கள் ஒன்றாக இணைந்து ஒரு ஆல்பத்தை உருவாக்கத் திட்டமிட்டிருந்தோம். அவரது குடும்பத்தினரும், உலகெங்கிலும் உள்ள அவரது எண்ணற்ற மாணவர்களும் இந்த இழப்பைத் தாங்கும் வலிமையைப் பெற பிராத்திக்கிறேன். இறைவனிடமிருந்து வந்தோம் இறைவனிடமே செல்கிறோம்!" என்று பதிவிட்டுள்ளார்.
ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!
கார்த்திகை மாத சிறப்புகள், பண்டிகைகள் , வழிபாடுகள்... முழு தகவல்கள்!
