"தவெக உடன்படாவிட்டால் அமைச்சரவையிலிருந்து வெளியேறுவோம்" - அமைச்சர் ராஜேஷ்குமார் அதிரடி!

 
அமைச்சர் ராஜேஷ்குமார்

வரும் 2029 நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல்காந்தியே பிரதமர் வேட்பாளர் என்பதில் காங்கிரஸ் உறுதியாக இருப்பதாகவும், அதற்குத் தவெக உடன்படாவிட்டால் தங்களது அமைச்சர் பதவிகளைத் துறந்துவிட்டு வெளியேறுவோம் என்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.

2029 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி தான் தங்களது கட்சியின் பிரதமர் வேட்பாளர் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

ராகுல்  விஜய்ராகுல் ராகுல்விஜய்

இந்தக் கொள்கைக்குத் தமிழக வெற்றிக் கழகம் உடன்பட மறுக்கும் பட்சத்தில், தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் உடனடியாகத் தங்களது பொறுப்புகளைத் துறந்துவிட்டு வெளியேறுவோம் என்று அவர் எச்சரித்துள்ளார்.

ஆளுங்கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியான காங்கிரஸ் அமைச்சர் விடுத்துள்ள இந்த அதிரடி அறிவிப்பு, தமிழக அரசியல் களத்தில் பெரும் சலசலப்பையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.