நடந்தது என்ன? மகா கும்பமேளா கூட்ட நெரிசலும், உயிரிழப்புகளும்... முழு தகவல்கள்!

 
நடந்தது என்ன? மகா கும்பமேளா கூட்ட நெரிசலும், உயிரிழப்புகளும்... முழு தகவல்கள்!

இன்று ஜனவரி 29ம் தேதி மௌனி அமாவாசை என்பதால் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமத்தில் புனித நீராட அதிக அளவில் பக்தர்கள் வருகை தரலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டிருந்த. லட்சக்கணக்கானோர் ஒரே இடத்தில் திரண்டிருந்த நிலையில் நள்ளிரவில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறைந்தது 15 பேர் உயிரிழந்திருக்கலாம் என  சிகிச்சையில் ஈடுபட்டுள்ள மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். ஆனால் 30 பேர் உயிரிழந்திருக்கலாம் ,70 க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களில் பாதிக்கப்பட்டோர் படுகாயம் அடைந்தோர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் என அங்கிருக்கும் பக்தர்கள் கூறி வருகின்றனர். 

கும்பமேளா தீவிபத்து


மேலும், இந்த கூட்ட நெரிசலில் சிக்கி பலரும் காயமடைந்துள்ளனர். காயம் குறித்து மட்டுமே அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். உயிரிழப்புகள் அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிரதமர் மோடி உத்திரப்பிரதேச முதல்வருக்கு தொலைபேசியில்  மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டுள்ளார்.  இந்நிலையில் உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் தொலைபேசியில் நிலவரம் குறித்து விசாரித்து வருகின்றனர். பிரதமர் மட்டும் ஒரு மணி நேரத்துக்குள் 2  முறை யோகி ஆதித்யநாத்திடம் தொலைபேசியில் பேசியதாகத் தெரிகிறது.  இந்நிலையில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், சங்கம் காட் பகுதிக்கு பக்தர்கள் வரவேண்டாம் என  வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தி மொழியில் அவர் பகிர்ந்த அந்த சமூகவலைதளப் பகிர்வில், 'அன்பான பக்தர்களே பிரயாக்ராஜுக்கு வாருங்கள், கங்கையில் நீராடுங்கள், சங்கம் காட் முகத்துவாரம் நோக்கிச் செல்ல முயற்சி செய்யாதீர்கள். மாநில நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஒத்துழையுங்கள். சங்கத்தின் அனைத்து காட்களிலும் மக்கள் நிம்மதியாக புனித நீராடி வருகின்றனர். எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்.' என அறிவுறுத்தியுள்ளார்   உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் கடந்த 13-ம் தேதி மகா கும்பமேளா விழா தொடங்கியது. அங்கு திரிவேணி சங்கமத்தில் தினமும்  சுமார் ஒரு கோடி பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்ல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக நாடு முழுவதும் இருந்து பிரயாக்ராஜுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

மகா கும்பமேளா

பிரயாக்ராஜ் ரயில் நிலையம் மற்றும் அதன் அருகில் 7 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.   வட இந்தியாவில் மக மாதத்தில் வரும் அமாவாசை, மவுனி அமாவாசை என அழைக்கப்படுகிறது. இதையொட்டி மகா கும்பமேளாவில் இன்று  ஜனவரி 29ம் தேதி புதன்கிழமை 10 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் புனித நீராடுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதை முன்னிட்டு அம்ரித் கால ஸ்தானம் (புனித நீராடல்) மிகவும் முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் 'திரிவேணி யோகம்' என்ற வானியல் தினமான இன்று அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு பக்தர்கள் பலியாகி இருப்பது நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க! 

From around the web