என்ன செய்யப் போகிறது இந்தியா? விசாரணைக்கு நாங்க தயார்... பாகிஸ்தான் பிரதமர் வேண்டுகோள்!

 
பாகிஸ்தான் பிரதமர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 26  சுற்றுலா பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இந்தியா முழுவதும்  பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.இந்த தாக்குதலுக்குப் பாகிஸ்தான் தொடர்பு இருப்பதை நியூடெல்லி வலியுறுத்தி, சர்வதேச நாடுகளுக்கு ஆவணங்களுடன் ஆதாரங்கள் வழங்கிய நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முதல் முறையாக தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்திய அரசின் மிகக் கடுமையான நடவடிக்கைகளால் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக பெரும் அழுத்தத்தால்  பாகிஸ்தான், தற்போது பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான, வெளிப்படையான மற்றும் நம்பகமான விசாரணைக்கு தயார் என  அறிவித்துள்ளது.

கைபர் பக்துன்க்வா மாநிலத்தில் ராணுவ அகாடமியில் பட்டமளிப்பு விழாவில்  ஷெபாஸ் ஷெரீப், “சமீபத்திய பஹல்காம் நிகழ்வு பழி கூறும் கலாச்சாரத்தின் இன்னொரு எடுத்துக்காட்டாகும். இவ்வாறான நிகழ்வுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். பொறுப்புடன் நடக்கும் நம்பகமான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார்” எனக் கூறியுள்ளார்.  

இந்தியாவும், பாகிஸ்தானும் மீண்டும் ஒருமுறை பயங்கரவாத ஒழிப்பு மற்றும் எல்லை மீறல்களுக்கான விஷயங்களில் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் நடுநிலை விசாரணை அழைப்பு முக்கியத்துவம் பெறுகிறது. ஆனால் இந்தியா இதற்கு என்ன பதில் வழங்க காத்திருக்கிறது என்பதை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!

தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?

செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!

தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!

From around the web