என்னாகுமோ? ஏதாகுமோ? இன்று விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மீண்டும் விசாரணை!

 
விஜய் சங்கீதா விஜய் சங்கீதா

தமிழகம் முழுவதும் இன்று விஜய் விவாகரத்து வழக்கு என்னாகுமோ? ஏதாகுமோ என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று பிரார்த்தனைகளிலும் ரசிகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் கடந்த சில மாதங்களாகவே இடியாப்பச் சிக்கலாய் நீடித்து வரும் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது. 

கடந்த 26 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்களது திருமண வாழ்க்கையில் இணைந்திருந்த இந்த நட்சத்திர தம்பதியினருக்கு இடையே, கடந்த சில ஆண்டுகளாக மனக்கசப்பு நிலவி வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, கடந்த டிசம்பர் 3, 2025 அன்று மனைவி சங்கீதா, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுதாக்கல் செய்திருந்தார். அந்த 12 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரத்தில், கணவர் விஜய் தன்னிடம் கடுமையான மன ரீதியான உளைச்சலை ஏற்படுத்தியதாகவும், குடும்பத்தை உதாசீனப்படுத்தியதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளைச் சங்கீதா முன்வைத்திருந்தார்.

விஜய் சங்கீதா

இந்த விவாகரத்து வழக்கின் முதற்கட்ட விசாரணை கடந்த பிப்ரவரி மாத இறுதியில் நடைபெற்ற போது, நீதிமன்றம் ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு வழக்கினை ஒத்திவைத்து, நடிகர் விஜயை நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், ஏப்ரல் 20 அன்று நடைபெற்ற விசாரணையின் போது, தமிழகச் சட்டமன்றத் தேர்தல் பரபரப்புகள் மற்றும் பாதுகாப்புச் சூழல்களைக் கருத்தில் கொண்டு, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் ஜூன் மாதத்திற்கு தள்ளி வைத்திருந்தது.

அன்றைய விசாரணையின் போது, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விஜய், தற்போதைய ஆட்சிப் பொறுப்பு மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி அவரது தரப்பு வழக்கறிஞர்கள் அவசர மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர். அதனை ஏற்றுக் கொண்ட செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதி, இன்று நடைபெறும் விசாரணையில் முதலமைச்சர் விஜய் 'வீடியோ கான்பரன்ஸ்' எனப்படும் காணொளி காட்சி வாயிலாகத் தனது தரப்பு விளக்கங்களை அளிக்க அனுமதி அளித்துள்ளார்.

விஜய் சங்கீதா

இன்று மீண்டும் இந்த வழக்கு நீதிமன்ற மேசைக்கு வரவுள்ள நிலையில், இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்களது இறுதி வாதங்களை முன்வைக்கத் தயாராக உள்ளனர். சங்கீதா தரப்பில் நிரந்தர ஜீவனாம்சம்  மற்றும் நீலாங்கரையில் உள்ள தங்களது இல்லத்தில் தொடர்ந்து தங்குவதற்கான குடியிருப்பு உரிமைகள் கோரப்பட்டுள்ள நிலையில், நீதிமன்றம் இந்த விவகாரத்தில் சமரச மையத்திற்கு அனுப்ப உத்தரவிடுமா அல்லது வழக்கின் போக்கை மாற்றி ஏதேனும் இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பிக்குமா என்ற எதிர்பார்ப்பு தமிழகம் முழுவதும் ரசிகர்களிடையே காட்டுத்தீயாய் எகிறியுள்ளது.