குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 எப்போது வழங்கப்படும்? - பட்ஜெட்டில் அறிவிப்பு !!
2023-24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் இன்று தாக்கல் செய்தார். காலை 10 மணிக்கு உரையை தொடங்கிய நிதியமைச்சர் மதியம் 12 மணி வரை தாக்கல் செய்தார். அதில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. குறிப்பாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குடும்ப தலைவிக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை குறித்த அறிவிப்பு இடம்பெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தின் நிதி நிலையை நல்ல முன்னேற்றத்திற்கு கொண்டு வந்துள்ளோம். நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலம் என்ற இலக்கை நோக்கி பயணிக்கிறோம்
மகளிர் பயன் பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். இதற்காக 7000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை மறைந்த முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்தநாளில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்
தகுதி வாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு இந்த நிதியாண்டில் இருந்து மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்
பெண்களை உயர்த்தும் திட்டங்களை திமுக அரசு அமையும் போதெல்லாம் செயல்படுத்தி வருகிறது. மகளிர் சொத்துரிமை உள்ளாட்சி அமைப்புகளில் இட ஒதுக்கீடு என நான் பார்த்து அவர்களின் உரிமைகளை நிலைநாட்டுவதில் மக்களுடன் அரசு செயல்பட்டு வருகிறது