அவலாஞ்சி வனப்பகுதியில் மீண்டும் அபூர்வ வெள்ளை புலி!

 
அதிர்ச்சி! வண்டலூர் பூங்காவில் 16 வயதான பீஷ்மர் வெள்ளை புலி உயிரிழப்பு! அதிர்ச்சி! வண்டலூர் பூங்காவில் 16 வயதான பீஷ்மர் வெள்ளை புலி உயிரிழப்பு!

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள அவலாஞ்சி வனப்பகுதியில், உலகிலேயே மிக அரிதாகக் கருதப்படும் வெள்ளை புலி ஒன்று நடமாடுவது தற்பொழுது முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ளது. வனவிலங்கு புகைப்படக் கலைஞர் ஒருவரால் எடுக்கப்பட்ட இந்த வெள்ளை புலியின் புகைப்படங்கள், தற்பொழுது இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இடையே பெரும் ஆச்சரியத்தையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மரபணு மாற்றக் குறைபாடு காரணமாக இந்தப் புலிக்கு வெள்ளை நிறத் தோல் அமைந்திருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தரப்பில் முதற்கட்டமாகக் கருதப்படுகிறது.

பெங்களூருவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் Nilanjan Ray என்பவர், அவலாஞ்சி வனப்பகுதியின் அடர்ந்த காட்டுப் பாதையில் தனது வழிகாட்டியுடன் பயணித்துக் கொண்டிருந்த போது தற்செயலாக இந்த வெள்ளை புலியைப் பார்த்துள்ளார். இவரைக் கண்டதும் அந்தப் புலி அங்கிருந்த மலைச்சரிவில் அசுர வேகத்தில் பாய்ந்து ஓடியுள்ளதுடன், அதன் அருகிலேயே வழக்கமான நிறம் கொண்ட மற்றொரு புலியும் நடமாடியுள்ளது. இரண்டு புலிகளையும் ஒரே நேரத்தில் ஒப்பிட்டுப் பார்த்த போதுதான், இந்த வெள்ளை புலியின் தனித்துவமான நிற மாறுபாடு அவர்களுக்கு மிகவும் தெளிவாகத் தெரியவந்துள்ளது.

பொதுவாக மத்திய பிரதேசத்தின் ரேவா வனப்பகுதிகளில் மட்டுமே அரிதாகக் காணப்படும் இத்தகைய வெள்ளை புலிகள், தற்பொழுது தென்னிந்தியாவின் நீலகிரி காடுகளிலும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலைத் தொடர்ந்து அவலாஞ்சி வனப்பகுதியில் பாதுகாப்பை அதிரடியாகப் பலப்படுத்தியுள்ள வனத்துறையினர், அந்தப் புலியின் நடமாட்டத்தைக் கண்காணிக்கத் தானியங்கி கேமராக்களைப் பொருத்த முடிவு செய்துள்ளனர்.