திருநெல்வேலி இருட்டுக்கடை உரிமை யாருக்கு?... மீண்டும் சிக்கல்!
Apr 25, 2025, 11:55 IST

தமிழகத்தில் நெல்லை இருட்டுக்கடை உரிமை யாருக்கு என்ற பிரச்சனை மீண்டும் எழுந்துள்ளது. அந்த வகையில் இருட்டுக்கடை முன்னாள் உரிமையாளர் பிஜிலி சிங் எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் வழக்கு தொடர நயன் சிங் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய உரிமையாளராக உள்ள கவிதாவின் சகோதரர் நயன் சிங் இருட்டு கடை ஸ்தாபனம் தனக்கு தான் சொந்தம் என அறிவித்துள்ளார். உயிலில் குறிப்பிட்டபடி ஜெயராம் சிங் மகன் நயன் சிங்க்கு மட்டும் இருட்டுக்கடை ஸ்தாபனம் பாத்தியபட்டது.
இருட்டுக்கடை விவகாரம் தொடர்பாக 2வது மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் திருநெல்வேலியில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பிஜிலி சிங் எழுதி வைத்த உயிலின் அடிப்படையில் நயன்சிங் வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்க உள்ளார்.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மிஸ் பண்ணாதீங்க... தை மாதத்தின் சிறப்புகள், வழிபாடுகள்!
தை மாத ராசிபலன்கள்... எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றம்?
செல்வத்தை செழிக்கச் செய்யும் தை மாத ஞாயிறு விரதம்!
தை வெள்ளிக்கிழமை... வாழ்க்கையில ஜெயிக்க இதை செய்ய மறக்காதீங்க!
From
around the
web